
குற்றவாளிகளை கைது செய்ய பொலிஸாருக்கு உதவிய புத்திசாலி சிறுவர்கள்
சிகிரியாவில் துருக்கிய பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை தாக்கி அவரது பணப் பையைத் திருடிய சந்தேகநபர்கள் இருவரைக் கண்டுபிடிக்க இரண்டு இலங்கைச் சிறுவர்கள் பொலிஸாருக்கு உதவியுள்ளனர்.
இன்று காலை சிகிரியாவிற்கு விஜயம் செய்த குறித்த சுற்றுலாப் பயணி, மோட்டார் சைக்கிளில் குறுக்கு வீதியொன்றின் ஊடாக தனது தங்குமிடத்திற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்த போது, சந்தேகநபர்கள் சுற்றுலாப் பயணியைத் தாக்கி அவரது பணப்பையைப் பறித்துச் சென்றுள்ளதாகவும், பின்னர் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதை அவதானித்த அப்பகுதியிலுள்ள இரண்டு சிறுவர்கள் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை குறித்து கொண்டு பெற்றோருக்கு அறிவித்துள்ளனர்.
கொள்ளைச் சம்பவம் குறித்து சிறுவர்கள் அறிந்ததும் சுற்றுலாப் பயணி தங்கியிருந்த விடுதியின் உரிமையாளருக்கு சிறுவர்களின் பெற்றோர் மோட்டார் சைக்கிள் எண்ணைத் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து பொலிஸாரிடம் முறையிடப்பட்டது.
சீகிரிய பொலிஸார் சந்தேக நபர்களை 45 நிமிடங்களுக்குள் கண்காணித்து சுற்றுலா பயணியிடமிருந்து திருடப்பட்ட 225 அமெரிக்க டொலர்கள் மற்றும் ரூ.20,000 பணம் என்பன மீட்கப்பட்டது.
சந்தேகநபர்கள் தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கொள்ளைச் சம்பவத்தில் காயமடைந்த துருக்கி சுற்றுலா பயணி சீகிரிய பிரதேச வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
