
மகளை காணவில்லை: கதறும் தாய்
ஜா-எல, ஏக்கல பிரதேசத்தில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
ஏக்கல, கொரலேலியவத்தை சேர்ந்த கோஷிலா ரோஷேன் (வயது – 16) என்ற சிறுமியே காணாமல் போயுள்ளார்.
குறித்த சிறுமி கடந்த 8 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் மேலதிக வகுப்பிற்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டதாகவும் 12 நாட்களாகியும் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை என்று அவரது தாயார் கூறினார்.
குறித்த யுவதி கடந்த 8ஆம் திகதி காலை வீட்டை விட்டு வெளியேறுவது வீட்டின் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த சிறுமியின் தாய்,
“அவளைப் பற்றி இன்னும் எந்த தகவலும் இல்லை. தொடர்ந்தும் காத்திருக்க முடியாமல்தான் ஊடகங்களுக்கு தெரிவித்தோம். யாராவது எனது மகளைப் பார்த்திருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.
