அரச வாகனத்தில் மதுபானங்கள் கொள்வனவு?

முல்லைத்தீவு – மல்லாவியில் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய சம்பவம் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றிருந்தது.

நில அளவை திணைக்களத்திற்கு சொந்தமான குறித்த வாகனம் நேற்று மாலை 6:20 மணியளவில் மல்லாவி பகுதியில் அமைந்திருக்கின்ற மதுபான சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்தில் மதுபானங்கள் பெற்று செல்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

குறித்த வாகனம் அவ்விடத்தில் நிற்பதனை ஒளிப்பதிவு செய்வதனை கண்டு அவர்கள் உடனடியாக அவ் இடத்தை விட்டு வெளியேறியதுடன் பின்னர் சிறிது நேரம் தாமதித்து குறித்த மதுபானசாலைக்கு மீண்டும் வந்து மதுபானங்களை பெற்றுக்கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மல்லாவி பொலிஸ் உயர் பொறுப்பதிகாரியிடம் சென்று இவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெறுகின்றது. குறித்த வாகனத்தையும், சாரதியையும் கைது செய்யுமாறு மக்கள் கோரிய போது அவ்வாறு கைது செய்வதற்கு தங்களால் முடியாது என பொலிசார் மறுத்திருந்தனர்.

அரச வாகனத்தில் மதுபானங்கள் கொள்வனவு?