பேருந்தில் தவறவிட்ட குழந்தைக்கு நடந்தது என்ன?

கிருலபனை பகுதியில் உறவினர்களின் கவனக்குறைவால் குழந்தையொன்று பேருந்தில் தொலைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பேருந்து எண் 138 இல் வந்த உறவினர்கள் அருங்காட்சியகம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர். இதன்போது, அவர்கள் குழந்தையை தவறவிட்டுள்ள நிலையில், உறவினர்கள் பேருந்தில் இருந்து இறங்கியதை அறியாமல், ஓடும் பேருந்தில் குழந்தை சிறிது தூரம் பயணித்துள்ளது. பின்னர் பேருந்தில் உறவினர்கள் இல்லை என்பதை அறிந்து குழந்தை அழ ஆரம்பித்ததும் பேருந்தில் இருந்த பயணிகளும் நடத்துனரும் சேர்ந்து குழந்தையை கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், குழந்தை காணாமல் போனதை உணர்ந்த உறவினர்கள், குழந்தையை தேடி பேருந்து சென்ற வீதியில் முன்னோக்கி நடந்துள்ளனர். அதன்படி கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு வந்த குழுவினர் குழந்தையை பெற்றுக் கொண்டுள்ளனர்.