வெளிநாட்டில் இருந்துவந்த காணொளி அழைப்பு: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி
கிளிநொச்சி நபர் ஒருவருக்கு வெளிநாட்டில் இருந்து காணொளி அழைப்பு எடுத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அந்த காணொளியில் பெண் ஒருவர் நிர்வாணநிலையில் நின்றதாகவும் அதன் பின்னர் கிளிநொச்சி நபர் தகாத உறவில் இருப்பதுபோல காணொளி அனுப்பியதுடன் அவரது நண்பர்களுக்கும் அக்காணொளியை அனுப்பியதுடன், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
AI தொழில்நுட்பம் என்பது தற்போது மக்களிடையே வெகு பிரபலமாகியுள்ளது. இந்த AI தொழில் நுட்பமானது, மனித இனத்தின் வளர்ச்சி என மகிழ்ச்சியடைந்தாலும் மற்றுமொரு பக்கத்தில் மோசடியாளர்களால் இதில் உள்ள ஆபத்துக்களையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.அந்த AI தொழில்நுட்பத்தால் ஒருவரின் புகைப்படத்தை மாற்றி என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். நல்லதை மட்டுமே எண்ணி செய்பவர்களை பற்றி பிரச்சனை இல்லை.
ஆனால் சிலமோசடியாளர்கள் இதனை தவறாக பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் தங்கள் புகைப்படங்களை பதிவிடிவோர் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இன்றையகாலகட்டத்தில் எல்லோருமே சமூகவலைத்தளங்களில் தங்கள் புகைப்படங்களை வெளியிடுவதை வழமையாக வைத்திருக்கின்றோம். அவ்வாறு நாம் பதிவிடுகையில் முகம் தெரியாதவர்களின் கைகளில் உங்கள் புகைப்படங்கள் இணைக்கப்பட்டு பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கலாம் என்பதில் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.