வாகன விபத்து: இளைஞன் பலி

கிளிநொச்சி பூநகரி பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம் பெற்ற விபத்தின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஒருவர் காயமடைந்து கிளிநொச்சிமாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வாகனம் மோதியதாக கூறப்படுகின்றது. மேலும் விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் தப்பிச்சென்ற வாகனம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.