ரயில் பாதையில் கை பிரித்து எடுக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்

ஹொரபே மற்றும் எடரமுல்லைக்கு இடைப்பட்ட ரயில் பாதையில் பெண் ஒருவரின் சடலம் இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

இராஜகிரிஇ நாவலஇ பாடசாலை மாவத்தையைச் சேர்ந்த ஹவேரிஸ் சித்ராங்கனி டயஸ் அபேசிங்க (வயது – 59) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹோரேப் புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு நோக்கி 100 மீற்றர் தொலைவில் தொடருந்து பாதையில் சடலம் கிடப்பதாகவும் குறித்த சடலத்தில் ஒரு கை பிரிக்கப்பட்டு காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இறந்தவரின் கைப்பை மற்றும் கைபேசியும் காணப்பட்டதுடன் கைப்பையில் இன்று காலை அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறப்பட்ட தொடருந்தின் பயணச்சீட்டும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தனியார் சட்ட நிறுவனம் ஒன்றில் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வருவது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக ராகம பொலிஸார் மேலதிக விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.