ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் ஒன்று இன்று சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் உள்ள தென்னம் தோட்டக்காணியில் இருந்து துர்நார்ற்றம் வீசியதையடுத்து அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் காண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதிய சேர்ந்த இராசலிங்கம் சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதிபதி எஸ்.கெங்காதரன், முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி சுபுண் ஏக்கநாயக்க ஆகியோர் சடலத்தை பார்வையிட்டுள்ளதுடன் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சடலம் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெரத் தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த நபரிற்கு அருகே காலணி ஒன்றும் அண்மித்த பகுதியில் சைக்கிள் ஒன்றும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.