திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் வில்லைகள் அன்பளிப்பு

– திருகோணமலை நிருபர்-

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சை வில்லைகள் கிழக்கு மக்களின் குரல் அமைப்பினால் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

Voice of Srilanka அமைப்பினால் கிழக்கு மக்களின் குரல் ஊடாக 100 கண் சத்திரசிகிச்சை வில்லைகள் நேற்று திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

சுகாதாரதுறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சத்திர சிகிச்சைகள் பிற்போடப்பட்டு இருக்கும் அபாயம் காணப்பட்டுக் கொண்டிருந்தது. அதுபோன்று பல்வேறு தரப்பட்ட சிகிச்சைகளின் எண்ணிக்கைகள் குறைந்திருந்தது.

இந்நிலையில் மக்களின் நலனுக்காக இந்த வில்லைகள் இத்தாலி நாட்டில் வசித்து வரும்  இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் கண் வைத்திய நிபுணர் மங்கள திஸாநாயக்கவிடம் கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் பிரதிநிதி அருன் ஹேமச்சந்திரன் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இத்தாலி நாட்டின் Voice of Srilankaவின் பிரதிநிதி ரங்கும்புர கெதர நிலூ என்பவரும் கலந்து கொண்டார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்