யாழில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – பலாலி கிழக்கு பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பகல் வேளையில் குளவி கூட்டில் இருந்து கலைந்த குளவிகளால் இடம்பெற்றது.

காயமடைந்த ஐவரும் சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்