
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பான தீர்மானம்
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பான சில தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் என்னால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது .
அதில் மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அலுவலகத்தினை மட்டக்களப்பு கச்சேரியில் திறப்பது சம்பந்தமாகவும். எந்த மாவட்டத்தில் முதல் விதைப்பு நடைபெறுகின்றதோ அந்த நாளினை முதல் விதைப்பு திகதியாக தீர்மானிப்பது என்ற முடிவுகள் எனது கோரிக்கைகளுக்கு அமைவாக எடுக்கப்பட்டது, என தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
