3 மாதங்களாக 16 வயது சிறுவனுடன் உல்லாசம்: 27 வயது பெண் கைது

இந்தியாவில் 16 வயது மாணவனை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த 27 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மானாமதுரையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள பாடசாலையில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.

குறித்த மாணவனது பக்கத்து வீட்டில் 27 வயது இளம்பெண் தன்னுடைய 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.இவருடைய கணவர் வாகன சாரதியாக இருப்பதால் அடிக்கடி வெளியூருக்கு சென்று விடுவார். மாணவனும், இளம்பெண்ணும் உறவினர் என்பதால் அடிக்கடி இருவரும் மாறி மாறி வீட்டுக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில் அந்த மாணவருக்கும், இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக மாணவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டு சோர்வாக காணப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த அவருடைய பெற்றோர் அதுகுறித்து மாணவரிடம் கேட்டுள்ளனர்.

இதன்போது மாணவன் தயங்கியபடி அந்த பெண் 3 மாதங்களாக மிரட்டி பாலியல் உறவு கொள்வதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மானாமதுரை மகளிர் பொலிஸ்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து பொலிஸாரினால் போக்சோ சட்டத்தின் கீழ் குறித்த பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்