முகநூல் காதல்: வன்புணரப்பட்ட 15 வயது சிறுமி
அளுத்கம தர்கா நகரப் பகுதியில் பதினைந்து வயது மாணவியொருவர் முல்லேரியாவில், முகநூல் மூலம் அறிமுகமான இளைஞன் வீட்டுக்குச் சென்ற நிலையில், அங்கு அந்த இளைஞனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லேரியா பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அளுத்கம பொலிஸில் மாணவி தனியாக வீட்டை விட்டு சென்றுள்ளதாகவும் அவரை தேடித்தருமாறு மாணவியின் தாயார் செய்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி அளுத்கம பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபரான இளைஞரும் மாணவியும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்