கார்களை விடுவிப்பதற்கான நிதி மோசடியில் ஈடுபட்டவர் கைது

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், இறக்குமதி செய்யப்பட்ட 3 கார்களை விடுவிப்பதற்கான நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கொழும்பு மோசடி விசாரணை பிரிவினரால் 3 பேர் வழங்கிய முறைப்பாட்டுக்கமைய கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

தலவத்துகொடை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய அலகுக்கலை நிபுணரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதானவர் முறைப்பாட்டாளர்களிடம் இருந்து 6,272,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் யாரேனும் இந்த மோசடியில் சிக்குண்டுள்ளனரா? என்பது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்