காதலை முறித்த சிறுமி: காதலனின் கொடூர செயல்
மினிபே, ஹசலக்க, மொராய பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தரம் 11இல் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
முகப்புத்தகம் ஊடாக குறித்த நபருடன் அறிமுகமான மாணவி சந்தேக நபருடன் ஒரு வருட காலமாக காதல் தொடர்பில் இருந்துள்ளதுடன் குறித்த மாணவி தன்னுடனான காதல் உறவை நிறுத்தியதால் ஆத்திரமடைந்து தான் தாக்கியதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தாக்குகலில் காயமடைந்த சிறுமி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்