யாழ்ப்பாணத்தில் மலையக மக்களின் பேரணிக்கு ஆதரவு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாண்புமிகு மலையக மக்களின் தலைமன்னார் தொடக்கம் மாத்தளை வரையான நடைபயணத்துக்கு ஆதரவாக பேரணி ஒன்று இன்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

அதன் பின்னர் ஒரு அணியினர் வாகனப்பேரணியாக வவுனியா நோக்கி புறப்பட்டனர்.

பேரணியில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  முஸ்லீம் சகோதரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.