
ஜனாதிபதிக்கும் விக்னேஸ்வரனுக்குமிடையில் கலந்துரையாடல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று திங்கட் கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலின் போது நாளைய தினம் இடம்பெறவுள்ள சர்வகட்சி கூட்டம் மற்றும் 13ஆம் திருத்தச் சட்டம் என்பன தொடர்பில் கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
