தமிழ் அரசியல் கைதிகள் இருவருக்கு பொது மன்னிப்பு

சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் இருவர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் இன்று செவ்வாய் கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சண்முகரட்ணம் சண்முகராஜன் மற்றும் செல்லையா நவரட்ணம் ஆகிய இருவருக்கே இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெடிப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சண்முகரட்ணம் சண்முகராஜன் மற்றும் மத்திய வங்கியின் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு உதவி செய்ததாகக் கூறி 200 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த செல்லையா நவரட்ணம் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல்24 Whatsapp Mobile +94755155979 OFFICE +94652227172