மட்டு.தன்னாமுனையில் விபத்து : பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை!

 

-மட்டக்களப்பு நிருபர்-

மட்டக்களப்பு தன்னாமுனைப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஆரையம்பதி பாலமுனையைச் சேர்ந்த குழந்தையொன்று உயிரிழந்த சோக சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

ஆரையம்பதி பாலமுனையைச் சேர்ந்த ஒரு வயதும் இரண்டு மாதங்களேயான பாத்திமா மைஸ்ஹறா எனும் குழந்தையே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளது.

இவர்கள் பாலமுனையிலிருந்து பாசிக்குடா நோக்கி முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை தன்னாமுனையில் வைத்து முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது காயமடைந்த மூன்று பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்