
அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்குரிய புதிய நியமனங்களுக்கு தடை!
இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு புதிய நியமனங்கள் வழங்குவதை தடுத்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவை இன்று புதன்கிழமை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான மனு சுமன சந்ர தேரரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்த மனு இன்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்டபோது இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
