கடிதம் எழுதி வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்த இளைஞர்!

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

கந்தளாய் பியந்த மாவத்தை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கயான் மதுசங்க என்ற இளைஞரே இதன்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு திருகோணமலையிருந்து கொழும்புக்குச் சென்ற இரவு நேர அஞ்சல் கடுகதி ரயிலில்  மோதியே இளைஞர் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபர் திருமணமானவர் என்பதுடன், கடிதமொன்றை எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,  இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணையை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்