6 ஆண்டுகள் உயிரிழந்த தாயின் சடலத்துடன் வாழ்ந்த மகன்
இத்தாலியில் பென்ஷன் பணத்திற்காக தன் தாயின் இறந்த சடலத்துடன் ஒருவர் 6 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.
ஹெல்கா மரியா ஹெகன்பார்த் என்பவர் தனது மகனுடன் வசித்த வந்த நிலையில் இவருக்கு மாதம் தோறும் பென்ஷன் பணம் வந்துக் கொண்டிருந்தது.
எனினும், ஹெல்கா தனது 86 வயதில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் பென்ஷன் பணம் கிடைக்காமல் போய்விடுமோ என்று நினைத்த அவர், ஹெல்கா இறந்ததை யாரிடம் சொல்லாமல் மறைத்தார்.
இதனையடுத்து, மகன் ஹெல்காவின் உடலை வீட்டிலேயே சடலம் வைக்கும் பையில் சுற்றி வைத்துள்ளார். சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் ஹெல்கா எங்கே என்று மகனிடம் விசாரிக்க, அவர் சொந்த ஊரான ஜெர்மனிக்கு சென்றுவிட்டார் என்று பொய் கூறியுள்ளார்.
இப்படியே 6 ஆண்டுகள் கடந்த நிலையில் தாய்க்கு வந்த பணத்தை மகன் எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார்.
இதனையடுத்து, ஹெல்கா கடந்த 6 ஆண்டுகளாக எந்தவித சுகாதார அட்டையை பயன்படுத்தவில்லை. கோவில் 19 காலத்திலும் அவருக்கு மருத்துவ உதவி தேவைப்படவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த இத்தாலி நாட்டு அதிகாரிகள் கடந்த மே 25ம் திகதி ஹெல்கா தங்கியிருந்த வீட்டிற்கு அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர்.
இதன் போது ஹெல்காவின் இறந்த சடலத்துடன் மகன் 6 ஆண்டுகளாக அதே வீட்டில் வசித்து வந்தது தெரியவந்தது.
குறித்த நபர் கடந்த 6 ஆண்டுகளாக 1.56 லட்சம் யூரோ அதாவது பென்ஷன் தொகையை அதாவது இலங்கை ரூபா படி 4.82 கோடி ரூபாவை ஹெல்காவின் மகன் பெற்றுள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்