நேர்காணலுக்கு சென்று கொண்டிருந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள முட்டாஸ் கடை சந்தி அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீசாலையைச் சேர்ந்த இராஜரட்ணம் அபிதாஸ் (29 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தபோது லொறியுடன் மோதுண்டு லொறியின் சில்லினுள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நேர்காணல் ஒன்றிற்காக சென்றபோதே குறித்த இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்