ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பு

🏡நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் “ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது.

🏡விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

🏡அந்தவகையில் இன்றைய நாளிலும் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 9️⃣4️⃣ஆவது இல்லம் பயன்பெறும் குடும்பத்திடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

🏡இவ் இல்லமானது மன்னார் மாவட்டத்தில் ஈச்சலவக்கை எனும் கிராமத்தில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்கின்ற குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

🏡இதற்கான நிதி உதவியினை யாழ்ப்பாணம் பளையில் வாழ்கின்றதான திரு.திருமதி பாலவினாயகமூர்த்தி , பாலயோகமணி அவர்களுடைய சுவிற்சர்லாந்தில் வாழ்கின்றதான மகள் பமீரா மற்றும் பேரப்பிள்ளைகள் ஆகிசன், ஆதுசன் ஆகியோர் வழங்கியுள்ளார்கள்.

🏡இவ் மகத்தான உதவியினை நல்கிய உறவுகளுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

🏡அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.

Housing hand over

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்