ரயில் கடவை காவலாளி ரயில் மோதி பலி

-திருமலை நிருபர்-

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ரயில் கடவை காவலாளி இன்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் ரயிலுடன் மோதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் திருமலை ஜெயந்திபுர பகுதியில் வசிக்கும் பீ.ஏ.றனசிங்க (வயது-63) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது.

திருகோணமலை பிரீமா ஆலையிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் பத்தினி புறத்தில் உள்ள ரயில் கடமையை அண்மித்த போது காவலாளி உறங்கிக் கொண்டிருந்த போது ரயிலின் சத்தத்தை கேட்டு எழுந்து ரயில் கடவையை மூடுவதற்காக சென்ற போது ரயிலுடன் மோதியதாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை தம்பலகாமம் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று ரயில் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.