பொலிஸ் சோதனை சாவடி அமைக்க கோரிக்கை

கடந்த சில நாட்களாக சிலர் காணாமல் போயுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ள பலாங்கொடை – சமனலவத்தை பகுதியில் பொலிஸ் சோதனைச்சாவடி ஒன்றை அமைக்குமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆட்கள் காணாமல் பொவது தொடர்பில் நேற்று பலாங்கொடை – சமனலவத்தை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கூட்டமொன்றை அடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பலாங்கொடை பிரதேச செயலக அதிகாரிகள்இ பலாங்கொடை பொலிஸார்உள்ளிட்டோர் கலந்து பொண்டிருந்தனர்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இப் பகுதியில் சிறுவன் ஒருவன் காணாமல் போனமை தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை. அதே வேளை மற்றுமொரு ஆட்கடத்தல் கடந்த 3ம் திகதி இடம் பெற்றிருக்கிறது..

இதனையடுத்து குறித்த பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள் மிகவும் அச்சத்துடன் பாடசாலை செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்