15 வயது பாடசாலை மாணவியை காணவில்லை
-மன்னார் நிருபர்-
மன்னார்-முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பண்டாரவெளி, மணற்குளம் பகுதியில் வசிக்கும் ரிகாஷா (வயது- 15) என்ற மாணவியை நேற்று முன்தினம் வியாழக்கிழமை காலையில் இருந்து காணவில்லை என தெரிவிக்கப்பட்டது.
குறித்த மாணவி பண்டாரவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்று வருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மாணவி காணாமல் போனது தொடர்பாக மாணவி பற்றிய எவ்வித தகவல்களும் கிடைக்காததை தொடர்ந்து சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மேலும் குறித்த மாணவி பற்றிய தகவல்கள் ஏதும் தெரிந்தவர்கள் 074-2614797 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்