தோஷத்தை விலக்குவதற்காக சிறுவனுக்கு சூடு வைத்த விகாராதிபதி

வீரவில பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் தீய சக்திகளை விரட்டுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் கையில் தீக்காயங்களுடன் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விகாராதிபதி, தோஷம் விலக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு சிறுவனின் வலது கையில் பலத்த தீக்காயத்தை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவன் வீரவில வைத்தியசாலையிலும் பின்னர் அம்பாந்தோட்டை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்தின் பேரில் விகாராதிபதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்