களுத்துறை மாணவியின் நண்பியும் காதலனும் இன்று நீதிமன்றுக்கு

களுத்துறையில் ஐந்து மாடி விடுதி கட்டடத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த 16 வயது பாடசாலை மாணவி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அவரது நண்பி மற்றும் நண்பியின் காதலன் ஆகியோர் இன்று திங்கட்கிழமை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் களுத்துறை பிரதான நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.எனினும், உயிரிழந்த மாணவிக்கு இறுதியாக கடைசியாக தொலைபேசி அழைப்பை மேற்கொண்டவர் யார் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

மாணவியின் நண்பியால் இறுதியாக தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டதாக சில செய்திகள் வெளியாகியிருந்த போதிலும் அதுகுறித்த குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லையென பொலிஸார் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்