
காணாமல்போன யுவதி வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்பு
வெளிகல்ல பகுதியில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த யுவதி இன்று வெள்ளிக்கிழமை வயல் பகுதியொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எல்பிட்டியைச் சேர்ந்த பாத்திமா முனவ்வரா (வயது – 22 ) என்ற யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல்போயுள்ள நிலையிலேயே இவ்வாறு சடலமாக இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன யுவதியை கம்பளை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து மகாவலி கங்கை ஓடைகள் உட்பட காடுகளிலும் தேடி வந்த நிலையில், இன்று அங்குள்ள வயல் பகுதியில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
