
யுவதியொருவர் மாயம்
எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த யுவதியொருவர் கடந்த ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாத்திமா முனவ்வரா என்ற யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கெலிஓயாவில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றி வரும் குறித்த யுவதி கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியதாக அவரது தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், செல்லும்போது பஸ் கட்டணமாக நூறு ரூபா கேட்டதாகவும், யார் மீதும் தங்களுக்கு எந்த பகையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கம்பளை, வெலிகல்ல, எல்பிட்டிய மற்றும் மகாவலி ஆற்றின் கரையோரப் பகுதிகள் உள்ளிட்ட வனப்பகுதிகளில் யுவதியைத் தேடும் நடவடிக்கையை கிராம மக்களும் கம்பளை பொலிஸாரும் ஆரம்பித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
