
தாயால் 8 முறை கர்ப்பமடைந்த 16 வயது சிறுமி
இந்தியா தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கரு முட்டைகளை காசுக்காக விற்பனை செய்தமை தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைகாட்டி வலது பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் இந்திராணி தம்பதியினர் தமது மகளுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமிக்கு 4 வயது இருக்கும் போதே சரவணன் விபத்தில் சிக்கி உயிரிழக்க இந்திராணி, இரண்டாவதாக சையத் அலி என்பவரை திருமணம் செய்துள்ளார்.
தாயான இந்திராணியோ அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் தனது கருமுட்டையை விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் அவருக்கு ஒரு கருமுட்டைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரையிலும் வழங்கப்பட்டு வந்துள்ளது.
மேலும், சிறுமி 12 வயதை அடைந்த வேளை வளர்ப்பு தந்தையால் பாலியல் துன்புறுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
பின்னர் தமது மகள் என்று கூட கருதாது இந்திராணியும் சையத்தும் இணைந்து சிறுமியின் கருமுட்டையை விற்று காசாக்கியுள்ளனர்.
இவர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமியின் கருமுட்டைகளை 8 முறை விற்பனை செய்துள்ளனர்.
சிறுமியின் தாய் தமது 16 வயது மகளிற்கு 22 வயது எனவும் பானு மகாலிங்கம் என்ற பெயரில் திருமணமாகிவிட்டதாகவும் பொய் சான்றுகளை சமர்ப்பித்து கருமுட்டைகளை விற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இதற்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த மாலதி என்பவர் இடைத் தரகராக செயற்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் சிறுமி அண்மையில் மாவட்ட பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்ததையடுத்து தாயார் இந்திராணி அவரது இரண்டாவது கணவர் சையத் அலி மற்றும் இடைத்தரகர் மாலதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவர்களை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
