இரு பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 23 பேர் படுகாயம்

கஜுகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து மூதூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றும் கண்டியிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.30 அளவில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இரு பேருந்துகளின் சாரதிகள் உள்ளிட்ட 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்