புதைத்து வைக்கப்பட்ட அரிசி மீட்பு

நானு ஓயா கிளாசோ தோட்டத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்ட ஒரு தொகை அரிசி மீட்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரிசி விலை அதிகரித்து இருந்தபோது  கிளாசோ தோட்ட நிர்வாகத்தின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக  3000 கிலோ கிராம் அரிசி கொண்டுவரப்பட்டது.

இதில், 1600 கிலோ கிராம் அரிசியினை தொழிலாளர்களுக்கு விற்பனை செய்துவிட்டு அரிசிக்கு விலை குறைந்தமையால் மிகுதியான 1400 கிலோ கிராம் அரிசி மூடைகள் அறையிலேயே பூட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி காலாவதியான நிலையில் தோட்ட நிர்வாகத்தின் ஊடாக அவை  குழிதோண்டி புதைக்கப்பட்டது.

இந்த நிலையில் நானு ஓயா பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் படி, நேற்று செவ்வாய்க்கிழமை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

குறித்த அரிசி இரண்டு ஆண்டுக்கு மேல் ஆனதால் கெட்டுப் போய் அதிக துர்நாற்றம் வீசுவதாகவும் , இதன் மாதிரிகளையும் பரிசோனைக்காக எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்