
யாழ். பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ். பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
வெடுக்குநாறி மலையில் இருந்த விக்கிரகங்கள் மற்றும் சூலங்கள் பிடுங்கி வீசப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது மாணவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ” IMF இடம் எடுப்பது பிச்சை தொடர்வது இன் அழிப்பா, மண் துறந்த புத்தருக்கு மண்மீது ஆசையா, வெடுக்குநாறிமலை எங்கள் சொத்து, எமது நிலம் எமது உரிமை என கோஷமிட்டவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
