காஜலின் தலையில் செங்கல்லால் தாக்கிய மாமனார்

தொழிலுக்கு செல்ல வேண்டாம் என மாமனார் மருமகளை தாக்கி பலத்த காயங்களுக்கு உட்படுத்திய சம்பவம் இந்தியா – டில்லியில் பதிவாகியுள்ளது.

26 வயதுடைய காஜல் என்ற பெண் தொழிலுக்கு சென்று தனது கணவருக்கு உதவியாக செயற்படுவதற்கு முயற்சித்துள்ளார்.

இந்த நிலையில், நேர்முகப்பரீட்சை ஒன்றுக்காக செல்வதற்கு காஜல் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

காஜல் விட்டிலிருந்து வெளியேறும் சந்தர்ப்பத்தில் வீதியில் வைத்து அவரின் மாமா செங்கல்லினால் தலையில் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த காஜல் என்ற பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காஜலின் மாமா கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்