
புதிய பதவிகளில் நியமிக்கப்பட்ட ராஜபக்சர்கள்
புதிய பதவிகளில் நியமிக்கப்பட்ட ராஜபக்சர்கள்
நாடாளுமன்றத்தின் இரண்டு பதவிகளுக்காக நாமல் ராஜபக், சமல் ராஜபக் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, புதிய நியமனம் கிடைத்தமை பெருமையாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ ஏகமனதாக நியமிக்கப்பட்டுளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
