இன்று முதல் மீண்டும் திறக்கப்படும் பல்கலைகழகம்

ஹோமாகம – பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் இன்று (27) முதல் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது.

புதிய மாணவர்களை சித்திரவதை செய்த சம்பவத்தின் அடிப்படையில், ஹோமாகம – பிட்டிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை கடந்த வருடம் டிசம்பர் 19 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு அதன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

முதலாம் வருட மாணவர்களுக்காக மாத்திரம் இன்று பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என அதன் உபவேந்தர் மஹோபாத்யாய பேராசிரியர் பூஜ்ய நெலுவே சுமனவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பயன்படுத்தவும்