முடி நரைத்து வயதான தோற்றத்தில் ஜெயம் ரவி
கடந்த வருடம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ஜெயம் ரவிக்கு பெரிய அளவிலான வெற்றியை கொடுத்துள்ளது. இளவரசனாக மக்கள் மனதில் இடம் பிடித்து தற்போது உயர்ந்துள்ளார்.
அண்மையில் அவர் நடித்த ஒரு கடை விளம்பரத்திற்கு மட்டுமே அவர் கோடியில் சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது.
பொன்னியின் செல்வன் 2ம் பாகம், அறைவன், அகிலன், சைரன் என அடுத்தடுத்து அவர் நடிப்பில் படங்கள் தயாராகி வருகின்றன.
தற்போது நடிகர் ஜெயம் ரவியின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில் அவர் அடையாளம் தெரியாத அளவிற்கு முடி நரைத்து வயதான தோற்றத்தில் காணப்படுகிறார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம ஜெயம் ரவியா இது இப்படி இருக்கிறாரே என அதிர்ச்சி ஆகியுள்ளனர்.