16 வயது மாணவி காதலனால் கொலை
இந்தியாவில் – ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் பிரதாப் நகர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் கமலும் அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவியும் காதலித்து வந்த நிலையில்:சமீப காலமாகவே இருவருக்குமிடையில் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
தன்னால் வீட்டை மீறி திருமணம் செய்து கொள்ள முடியாது என அந்த பெண் கமலிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில்இ கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி அன்று கமல் அந்த மாணவியை தான் வாடகைக்கு இருக்கும் அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சென்ற மாணவி நாம் பிரிந்து விடலாம் என்றும் தனக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கமல் அந்த பெண்ணை அவரது துப்பாட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
பின்னர், தனது சகோதரர் ரவி என்பவரின் உதவியுடன் உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து தூக்கிச் சென்று 20 கி.மீ தொலைவில் உள்ள அணை கால்வாயில் வீசியுள்ளனர்.
இதன் பின்னர் அவர் ஊரைவிட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளனர்.
இச் சம்பவத்தை அறியாத பெண்ணின் பெற்றார், பொலிஸ்நிலையத்தில் குறித்த பெண் தொலைந்து விட்டதாக புகார் அளித்தனர். பொலிஸ் விசாரணையில் சம்பவ தினத்தில் கமலுடன் குறித்த பெண் ஒன்றாக சென்றது தெரியவந்தது. இதனிடையே குறித்த பெண்ணின் உடலை பெப்ரவரி 1ஆம் திகதி கால்வாயில் இருந்து மீட்டனர். அதைத் தொடர்ந்து எட்டு பேர் கொண்ட தனிப்படை நடத்திய தேடுதலில் வெளியூரில் பதுங்கியிருந்த கமல் மற்றும் அவரது சகோதரர் ரவி இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.