வசந்த முதலிகேவுக்கு 3 வழக்குகளில் பிணை
மேலும் 3 வழக்குகள் தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவிற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
அது தொடர்பான வழக்குகள் இன்று புதன்கிழமை நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை, பயங்கரவாத தடை குற்றச்சாட்டின் கீழான குற்றச்சாட்டிலிருந்து வசந்த முதலிகேவை விடுவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், நிலுவையிலிருந்த மேலும் 3 வழக்குகளில் வசந்த முதலிகேவுக்கு இன்று பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.