பிரபல கஞ்சா வியாபாரி கைது
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிக்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் கஞ்சா போதை பொருளை மறைத்து வைத்திருப்பதாக பொலிஸ் விசேட பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்து வீட்டை சோதனையிட்ட போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரை கிலோ கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த ரத்தரங் என்றழைக்கப்படும் சுனில் சாந்தகே ஹசேல பியசாந்த (28வயது) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த சந்தேக நபருடன் அவரது வீட்டில் தங்கி இருந்த நாத்தாண்டிய- இஹலமாவில பகுதியில் வசித்து வந்த தம்மிலகே தமித் பெரேரா (26வயது) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு ஏற்கனவே நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கஞ்சா போதைப் பொருள் வியாபாரியுடன் வீட்டில் தங்கி இருந்ததாகவும் தெரிய வருகின்றது.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் விசாரணைகளின் பின்னர் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.