வசந்த முதலிகேவை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வசந்த முதலிகே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 150 நாட்களுக்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.