யாழில் இதுவரை தேர்தல் தொடர்பாக 3 வன்முறைச் சம்பவங்கள் பதிவு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் இன்று வரை மூன்று தேர்தல் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்மராஜ் தெரிவித்தார்.
தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் செய்யப்பட்டு தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம்வரை 3 தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக நடவடிக்கைக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.