
பரீட்சை பிரச்சினைகள் மற்றும் முறைகேடுகள் குறித்து அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம்
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும், பரீட்சை பிரச்சினைகள் மற்றும் முறைகேடுகள் குறித்து அறிவிப்பதற்காக 1911 அவசர தொலைபேசி இலக்கம், 0112 784 208, 0112 784 537, 0112 785 211 மற்றும் 0112 786 616 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருக்கும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.