வாக்குவாதம் முற்றிய நிலையில் அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற தம்பி

 

-கிளிநொச்சி நிருபர்-

வாக்குவாதம் முற்றிய நிலையில் தம்பியொருவர் தனது அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

கிளிநொச்சி தருமபுர பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் இன்று திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அண்ணன் தம்பி ஆகியோருக்கிடையில் தொலைபேசியால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தம்பி அண்ணனை கத்தியால் குத்தியுள்ளார்.

கத்திக்குத்திற்கு இலக்காகியவர் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளார்

3 பிள்ளைகளின் தந்தையான தருமராசா தவசீலன் (37 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்