87,000 தோட்டத் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுப்பு

பெருந்தோட்ட நிர்வாகத்தினரின் முறையற்ற நிர்வாகத்தால் 87,000 தோட்டத் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்குச் சென்றுள்ளனர் என, தொழில் அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

எனவே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தப்படும் அநீதியான நிலையைத் தடுப்பதற்கான புதிய சட்டத்தை கொண்டு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களுக்கு ஏற்படும் அநீதி தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தெரிவித்த அவர், சட்டதிட்டங்களுக்கு அமைவாக, தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறந்த சேவை நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.