
நாட்டின் சில இடங்களில் மழை : சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா, கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
தெற்கு நோக்கி நகரும் சூரியன், ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேராக மேலே இருக்கும், மேலும் சூரியன் யாழ்ப்பாணம் மற்றும் கொடிகாமம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:11 மணிக்கு உச்சம் கொடுக்கும்.
