
கோட்டையிலிருந்து புறப்படும் 8 ரயில்கள் இரத்து
ரயில் லோகோமோட்டிவ் இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 8 ரயில்கள் இன்று வெள்ளிக்கிழமை இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
குறித்த தகவலை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் லோகோமோட்டிவ் இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்