8 வயது சிறுவனை பணத்துக்காக கொன்ற 15 வயது சிறுவன்
இந்தியாவின் ஹரியானா மாநிலம் சண்டிகரில் பணம் பறிக்கும் நோக்கில் 8 வயது சிறுவனை 15 வயது சிறுவன் கொலை செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெயிட்டுள்ளது.
குறித்த 8 வயது குழந்தை தான் வசித்த வீட்டுத் தொகுதியின் கீழ் தளத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போயுள்ளார், குழந்தையை காணாததால் பெற்றோர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
பின்னர், குழந்தை கடத்தப்பட்டதாகவும், குழந்தையை திருப்பித் தர 6 இலட்சம் ரூபாய் பணம் தேவைப்படுவதாகவும் காணாமல் போன குழந்தையின் பெற்றோருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
எனினும் அன்றைய தினம் மாலை வீட்டுத் தொகுதியில் சிறுவனுனின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது கொலை செய்யப்பட்ட சிறுவனின் பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது சிறுவனே குறித்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்